Saturday, February 18, 2012

என் காதலின் ஆழம்.....

 உனக்காய் அழும் போதுதான்
புரிகிறது என் காதலின் ஆழம்
எனக்கு........
ஆனால் நீ அழும் போது
துடிக்கிறது என் நெஞ்சம்
உன்னை அழவைக்கின்றேனே என்று
என் காதலின் ஆழத்தை
என்னிடம் கேட்காதே பெண்ணே
நான் சிந்திய கண்ணிரிடம் கேட்டுப்பாரு..
உன்னை பார்த்ததும் அதுகூட
புன்னகைக்கும்.....என்னைப் பார்த்துக்கொள் என்று
                                                                                       -  -ஜனாவின் பயணம்-

காதலின் துயரம்

மன்னித்து விடு என்னை 
உன்னிடம் கேட்காமல் நான் 
திருடியதற்கு.....
உன் அழகான சிரிப்பை 
உன் அன்பான வார்த்தையை 
உனக்கு நான் தான் என்ற நினைப்பை 
உன் மீதுள்ள உரிமையை 
இவை வேண்டுமென்றால் 
தந்துவிடுகிறேன் 
ஆனால் என்னை 
மட்டும் நீங்கிச் 
சென்றுவிடாதே!
உடலை விட்டு உயிர் 
போகும் கொடுமையை விட 
என்னை விட்டு நீ போகும் 
அந்த நொடி கொடுமையானது பெண்ணே......
                                                                            -ஜனாவின் பயணம்-

அன்பு...

உன் உண்மையான 
அன்புக்கு ஏங்கும் ஒரு 
பைத்தியக்காரன் நான்....

நான் கேட்பது 
எனக்காய் நீ 
வேண்டும் என்று 
இருப்பாயா இனியாவது? 

தெரிந்துகொள் இல்லையேல் 
புரிந்துகொள்...
உன்னால் ஒரு ஜீவன் 
செத்துக் கொண்டிருப்பதை.....
மருந்தும் உன்னிடம் தான் உள்ளது பெண்ணே.....
உண்மையான பாசம்! 
நீ மட்டும் எனக்குத்தான் என்கிற வார்த்தை!
அதை நிரூபித்துக்காட்டு 
அது போதும் 
நான் இறந்தாலும் வாழ்வேன்!
                                                                  -ஜனாவின் பயணம்-- 
Newer Posts